Tuesday, October 26, 2004

உணர்வுகள்!



ஆசிரியர்: சு.பொ.பரமேசுவரன்
வெளியீடு: பூர்ணிமா பதிப்பகம், புதிய எண் 5, ஆண்டாற் நைநியப்பன் தெரு,
34, மந்தைவெளி லேன், மயிலாப்பூர், சென்னை-4
மின்னஞ்சல்: poornimaapublication@yahoo.in


""நெடுந்தீவைச் சேர்ந்த சு.பொ.பரமேசுவரன் 'நெடுதல் வாடைக்' கவிதைகளை நெஞ்சில் நிறுத்தி வடித்துள்ளார். கவிதைக் களத்து மேட்டில் வைக்கோல் போர்களைக் குவிக்காமல், கருத்துகள் குருத்து விடும் கதிர்மணிகளை நிரப்பியுள்ளார். எழுத்துச் சேதம் ஏற்படவில்லை. சுற்றுச் சூழல் மாசுபடாதிருக்கவும், இயற்கைவளம் பெறவும்,புவிக்காதலர் இயக்கத்தை தோற்றுவிக்க முயல்கிறார். அவரின் இந்தத் தத்துவத்திற்கு அவர்தம் கவிதைத் தொகுப்பு 'தமிழில் ஒரு தாஸ்கபிடல்'.

இது விற்பனைக்கு அல்ல. வெளிக்காட்ட மட்டுமே என்கிறது அவர் எழுத்து. 'நாய் கூடத் தன் மொழியை குரைத்துரைக்கும்' எனக் குமுறுகிறார். 'தரணியிலே தமிழருக்கோர் தனி நாடுண்டேல் தமிழீழம் எனச் சொல்லத் தயங்காதீர்கள்!' என்னே அவர்தம் பாரதி நோக்கு. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே பரமேஸ்வரன் பாடல் படித்து விட்டோமென்று' என் கவிதை நெஞ்சம் களிப்படைகின்றது. இவர்தம் சிந்தனைகளை 'மனதில் நினைப்போம் ஒரு கணம்! மானுடம் மலரும் மறுகணம்! இதுவும் அவர் கருத்தே. வாழ்க வளர்க..." - கலைமாமணி தஞ்சைவாணன் (நூலிலிருந்து)

நன்றி:பதிவுகள்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home