Saturday, February 12, 2005

தூவானம்




ஆசிரியர் :அ. யேசுராசா
வகை :பத்தி எழுத்துக்களின் தொகுப்பு
வெளியீடு :மூன்றாவது பதிப்பகம்
பக்கங்கள் :88
விலை :ரூ.120.00 (−லங்கை விலை)

ஈழத்துத் தமிழ்ச் சுழலில் 1970களுக்குப் பின்னர் கவனிப்புக்குரிய தாக்கம் நிறைந்த ஒருவராக வெளிப்பட்டவர் அ. யேசுராசா. கவிதை, சிறுகதை விமரிசனம், பத்திரிகையாசிரியர் என பன்முக தளங்களில் இயங்கியவர்.

திசை என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்தவர். அப்போது திசையில் கலை இலக்கியத்துறை சார்ந்த பத்தியன்றைத் தொடர்ந்து எழுதி வந்தார். அது தூவானம் என்னும் பெயரில் வெளிவந்தது.

நீலாம்பரன் என்னும் புனைபெயரில் திரைப்படம், ஓவியம், கவிதை, சிற்றிதழ், கலாசார நடவடிக்கைகள் என பலவற்றைத் தொடுவதாக அந்தப் 'பத்தி' எழுத்துக்கள் அமைந்திருந்தன.

தற்போது இந்த பத்தி எழுத்துக்களைத் தொகுத்து 'தூவானம்' என்னும் தலைப்பில் மூன்றாவது பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சூழலுக்கு இது போன்ற நூல்களின் வரவு புதிது. குறிப்பாக பத்திரிகையியல் சார்ந்த வளர்ச்சிப் பரிமாணங்களைஅதன் காத்திரத்தன்மைகளை கோடிட்டுக் காட்டவும் இந்நூல் உதவியாக ருக்கும்.(ஆறந்திணை)

நன்றி:ஆறாந்திணை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home