Saturday, February 19, 2005

மீண்டும் வரும் நாட்கள்



ஆசிரியர்:மு.புஷ்பராஜன்
விலை:60.00 (இந்திய ரூபா)
வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு
காலச்சுவடு பதிப்பகம்,9/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

இவை நகரமும் இல்லாது கிராமமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திகழும் குருநகர் என்னும் கடலோரத்தைச் சுற்றிக் கவியும் கவிதைகள்.

வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வியாபித்துவரும் இராணுவப் பயங்கரவாதத்தை வெளிக்காட்டி மௌனித்து நகரும் கவிதைகள்.

தன் சொந்த மண்ணிலே தான் வாழ்ந்த காலங்களை,துயரும் மகிழ்வும் தரும் அக்காலங்களை,ஒருவகை nostalgic தன்மையோடு மீட்டுப் பார்ப்பன போன்ற கவிதைகள்.தன் ஆத்மார்த்த பார்வையைப் படரவிட்டு அவற்றின் ஒளியில் தன் விடுதலை எழுச்சிக்குப் பலம் தேடும் கவிதைகள்.

இந்நான்கு வகைக் கவிதைகளின் சங்கமிப்பே புஷ்பராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு.
(நன்றி-காலச்சுவடு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 1:27 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

தகவலுக்கு நன்றி ஈழநாதன்.

 

Post a Comment

<< Home