Tuesday, November 22, 2005

சிங்கப்பூரின் முன்னுதாரணம்

உலகமெங்கும் சிறுவர்களை பாலியற் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.தென்கிழக்காசிய வட்டாரம் இதில் முன்னணியில் இருக்கிறது.

சிங்கப்பூரில் சட்டபூர்வ வயதுக்கு குறைந்தோரை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதோ அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.வயது குறைந்த ஒருவரின் விருப்பதுடன் உறவு கொண்டால் கூட அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதனால் வயதுகுறைந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் ஆண்கள் தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவின் பாத்தாம் நகருக்கும் விடுமுறையைக் கழிக்கப் போவது வழமையாக உள்ளது.

கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் ஆண்கள் வயது குறைந்தோருடனான உறவை மேற்கொள்ள 'பாத்தாம்' செல்வது அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.பன்னிரெண்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான பெண்களை முதலீடாகக் கொண்டு பாலியற் தொழில் 'பாத்தாமி'ல் கொடிகட்டிப் பறக்கிறது.
இதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.இனிமேல் சிங்கப்பூருக்கு வெளியேயும் சிங்கப்பூர் வாசிகள் வயது குறைந்தோருடன் பாலியல் உறவிலீடுபட்டது நிரூபிக்கப்பட்டால் உள்ளூரில் நடைபெறும் குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை கிடைக்கும்.

இதன்படி 'பாத்தாம்' செல்லும் ஒரு சிங்கப்பூர் வாசி.வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக்கொண்டால் கூட தண்டனைக்குரிய குற்றம்.இதே சட்டத்தின் படி உள்ளூரில் பாலியல் வன்முறைக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை அதனை வெளியூரில் செய்தாலும் கிடைக்கும்

உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்கிறது அரசு
ஒருவர் பாலியல் உறவுகொள்வதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுந்தாலும் சிங்கப்பூர் சரியானதொரு முன்னுதாரணத்தை காட்டியுள்ளது.இதனை வாய்கிழிய ஜனநாயகம் பேசும் மற்றைய நாடுகளும் பின்பற்றினால் சிறுவர்களை பாலியலில் ஈடுபடுத்துவது எவ்வளவோ குறையும்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 10:52 PM, Blogger Narain Rajagopalan said...

மிகவும் நல்ல முன்னுதாரணமான நடவடிக்கை. நடைமுறை சிக்கல்கள் நிறைய இருந்தாலும், ஒரு சட்டமாக இதனை வரவேற்கிறேன்.

 

Post a Comment

<< Home