Thursday, December 09, 2004

காதோடு சொல்லிவிடு-கவிதைத் தொகுப்பு



ஆசிரியர்:பாரதி
விலை:£4.99
வெளியீடு:பெண்புலிகள்,விடுதலைப்புலிகள்,கிளிநொச்சி.
மேஜர் பாரதி

சத்தியபாமா விஸ்வலிங்கம் என இயற்பெயர் கொண்ட மேஜர் பாரதி, யாழ்ப்பாணத்தில் கல்லுவம், கரவெட்டி எனும் ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் பெளதீக விஞ்ஞானப்பிரிவில் அனுமதிகிடைத்து முதலாம் வருட மாணவியாக இருந்த காலத்திலேயே, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டவர். "முதலில் மனிதராய் வாழ முயற்சி செய்வோம் முடியாவிட்டால் புரட்சி செய்வோம்" என்கின்ற பாரதி, மரணத்தின் முன் எழுதிய இறுதி நாட்குறிப்பு, "ஓ! வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது". இவ்வரிகள் அவர் கடும் போராட்ட காலத்திலும் வாழ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை நமக்கு அடையாளங் காட்டுகிறது.

பாரதியின் குறிப்பிலிருந்து...

"எழுத்துலகில் எனது பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. மனச்சுத்தியுடன் எனது எழுத்தை மட்டும் பார்த்து விமர்சிக்கின்ற ஒரு நேர்மையான விமர்சகனால் என் எழுத்துக்கள் பாராட்டப்பட்ட பொழுதுகளில் எனது ஆத்மா சந்தோசப்பட்டதுண்டு. அதேபோல் அவர்கள் சுட்டுக்காட்டும் திருத்தங்களை ஏற்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. என் எழுத்துக்கள், நான் வாழும் இந்தச் சமூகத்தில் ஒரு சின்னத் துடிப்பை ஏற்படுத்தினால், அதுவே என் எழுத்தின் வெற்றியென நான் உணர்கிறேன்.

இந்நூலை இணையத்தில் வாங்கலாம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home