Monday, December 13, 2004

நீ இப்பொழுது இறங்கும் ஆறு -கவிதைத் தொகுப்பு


ஆசிரியர்:சேரன்
விலை:90.00
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன. சேரன் டொரண்டோ யார்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 7:52 PM, Blogger வீரமணிஇளங்கோ said...

வாசித்திருக்கிறேன் ஈழநாதன்.
உணர்ச்சிமிகு கவிதைகளும் இடம்பெற்றுள்ள தொகுப்பு.

"எல்லாவற்றையும் மறந்துவிடலாம்" என்கிற கவிதையை
சிங்கப்பூர்க்கவிமாலையில் நிகழ்த்திக்காட்டினார் திரு.சேரன்.
என்னே ஒருவேகம் கவிதையை படைப்பதில்?

ஆம்.கவிதையை வாசிப்பது கூடாது.நிகழ்த்திக்காட்டவேண்டும் என
வேண்டுகோளும் விடுத்தார் எங்களுக்கு.

வீரமணி இளங்கோ

 

Post a Comment

<< Home